Showing posts with label தூங்கும் அறை. Show all posts
Showing posts with label தூங்கும் அறை. Show all posts

Saturday, 28 September 2013

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?

காலை வேளை என்றாலே எல்லா வீடுகளிலும் அவசரமும் tensionனும் தான்.  வேலைக்குப் போபவர்கள், பாடசாலை போபவர்கள், கலாசாலை போபவர்கள் எல்லோரும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற நேரம் அது. அந்த அவசரமான வேளைகளில் வீட்டிலுள்ள சிறுபிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பார்களே, அது உண்மையிலேயே அம்மாமாரைச் சிரமப் படுத்துகின்ற காரியம் தான்.

பிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் போதிய அளவு நித்திரை செய்யவில்லை என்பதேயாகும்.
பிள்ளைகளுக்கு போதிய அளவு நித்திரை கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் சில

1.  சிறு பிள்ளைகளை இரவு 8.00 மணிக்கே நித்திரைக்கு அனுப்ப வேண்டும்.
2.  அவர்களை தனியான கட்டிலிலோ அல்லது படுக்கையிலோ தனியாகப் படுக்கப் பழக்குதல் வேண்டும்.
3.  பிள்ளைகள் படுக்கும் இடம் கடினமானதாக இல்லாமல் சொகுசானதாக இருக்க வேண்டும்.
4. பிளைகளின் படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை எல்லாம் சுத்தமானதாக மனதுக்கு ரம்யம் தருவனவாக இருக்க வேண்டும்.
5. இரவு உணவு கனதியானதாக இல்லாமல் இலகுவானதாக இருக்க வேண்டும்
6. பிள்ளைகளை இயன்றவரை தனியான, கதக்தப்பான வெப்பநிலை உள்ள அறையிலே தூங்க விட வேண்டும்.
7. பிள்ளைகள் தூங்கும் நேரத்தில் அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. பிள்ளைகள் தூங்கும் அறை சத்தம் இல்லாதவேறு அமைதியாக இருக்க வேண்டும்.

இவ்வளவு ஏற்ப்பாடுகளையும் பிள்ளைகளுக்குச் செய்யும் போது பிள்ளைகள் நிச்சயம் தமக்குத் தேவையான அளவு நித்திரையையும் ஓய்வையும் எடுப்பார்கள்.  காலை வேளைகளில் எழும்பமாட்டேன் என்று அடம் பிடிக்கமாட்டார்கள்.

மேலதிக வாசிப்புக்கு
மேலதிக வாசிப்புக்கு