Showing posts with label சிறுவர்கள். Show all posts
Showing posts with label சிறுவர்கள். Show all posts

Tuesday, 17 August 2021

மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள்




 

இந்தப் படத்தில் உள்ள அக்காவும் தம்பியும் மகிழ்ச்சியாக உற்சாகமாக பயமில்லாமல் பாடசாலை செல்கிறார்கள்.  அதன் ரகசியம் என்னவாக இருக்கும்.

** அவர்கள் நேர்த்தியான, அளவான,  பொருத்தமான ஆடை அணிந்திருக்கிறார்கள்.  அவர்களின் ஆடைகள் அவர்களின் கல்விக்கோ விளையாட்டிற்கோ இடையூறாக இருப்பதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் இருவரும் சுத்தமான ஆடைகள் அணிந்திருக்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் அன்றைய நாளுக்கான வீட்டுப் பாடங்கள் முழுவதையும் முடித்து, அன்றைய நாளுக்கு தேவையான கல்வி சாதனங்களையும் தமது புத்தகப் பையில் சீராக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** அவர்கள் நல்ல சத்துக்கள் நிறைந்த காலை உணவு உண்ட பின் பசி இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலை செல்லும் நேரத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களை கவலைப்படுத்தும் எதிர்மறையான பேச்சுக்களை பேசாமல், அவர்களை உற்சாகமூட்டும் நேர்மறையான பேச்சுக்களை பேசி வழியனுப்பி வைக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் ஆசிரியர்கள் அவர்களை தடி கொண்டு அடிக்காமல், சிறுமைப் படுத்தும் விதமாக கண்டிக்காமல் அன்புடனும் நட்பு மனப்பான்மையுடனும் கல்வி கற்பிக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் நிச்சயமாக பாடசாலையில் அதிக அளவில் கல்வி கற்பார்கள். அதுதானே பெற்றோருக்கு வேண்டியது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மேற்சொன்ன விடயங்களை கருத்திற் கொண்டு அனுப்புங்கள் பெற்றோரே. 

Sunday, 19 May 2013

சிறுவர்கள் நண்பர்களினூடாகக் கல்வி கற்கின்றார்கள். தம் திறன்களை வளர்த்துக் கொள்கின்றார்கள்


ஒரு சராசரி மனிதராக எமக்குள்ளே எத்தனையோ திறமைக் குறைவுகளும் பலவீனங்களும் இருக்கும்.  ஆனாலும் எமக்குள்ளே இருக்கும் குறைகள் எம் பிள்ளைகளுக்கு வருவதை நாம் யாருமே விரும்புவது இல்லை. எமக்கு இருக்கும் ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதை விட எமக்கு இல்லாத ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதற்க்காக நாம் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.

Tuesday, 16 April 2013

விளையாட்டு மைதானம் சிறுவர்களுக்கு சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் ஓர் இடம்

ராஜேல் 3 வயது நிரம்பியவள்.  கோடை விடுமுறைக்குப் பின் பாலர் பாடசாலைக்குச் செல்ல இருக்கின்றாள்.  பெற்றோர், குடும்பம் என்ற எல்லை தாண்டி சுற்றுப்புறச் சூழலுடன் ஊடாட வேண்டிய தருணம் அவளுக்கு வந்து விட்டது. 

ஒரு மதிய வேளையில் அவளை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.  அவளுடைய 2 வது நிரம்பிய தம்பியும் கூட வந்திருந்தான்.  சிறுவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  சிறிது நேரம் கழித்து அங்கு இன்னும் இரண்டு சிறுவர்கள் விளையாட வந்தார்கள்.  அந்தச் சிறுவர்களைக் கண்டவுடன் இவர்களின் விளையாட்டுத் தடைப்பட்டது.  ராஜேலின் முகத்திலே பயமும் வெட்கமும் கலந்த ஒரு உணர்ச்சியை அவதானித்தேன். 

பயந்த சுபாவம் என்பது ஒன்றும் பிளைகளின் பிறவிக்குணம் இல்லையே.  அவளுக்கு அதிக அளவில் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனவே அவளை எப்போதுமே வீட்டிற்குள்ளேயே விளையாட விடாமல் தினமும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன்.  பிற சிறுவர்கள் மீதான அவளுக்கிருந்த பயம் படிப்படியாகக் குறைவதை அவதானித்தேன். 

இப்பொளுது எல்லாம் பொது விளையாட்டு மைதானத்தில் ராஜேல் பிற சிறுவர்களைக் கண்டால் சகஜமாகத் தன் விளையாட்டைத் தொடர்கின்றாள் அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடுகின்றாள்.  அவளைப் பாலர் பாடசாலைக்குத் தயார்ப்படுத்திய நிறைவு எனக்குள் ஏற்ப்படுகின்றது.

விளையாட்டு மைதானம் என்பது சிறுவர்களுக்கு நல்ல உடல் விருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கின்ற இடம் மட்டும் இல்லை.  அது நல்ல சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கின்ற இடமும் கூட.  சிறு பிள்ளைகளை அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்கும் வெளி இடங்களிற்கும் அழைத்துச் செல்வது மிகவும் அத்தியாவசியமானது. 

பயந்த சுபாவமும் வெட்கப்படுகின்ற சுபாவமும் அவர்களுடய பிறவிக்குணம் என்று நினைப்பது தவறானது.  அவை படிப்படியான முயற்சியால் களையப்பட வேண்டியவை.