Wednesday 31 July 2013

உங்கள் குழந்தைகளின் கல்வி கற்க்கும் திறனை அன்புப் பராமரிப்பின் மூலம் ஊக்கப் படுத்துங்கள்

கல்வி கற்றல் என்றால் என்ன?  ஒரு பிள்ளை தன்னைச் சூழவுள்ள சூழலையும் உலகத்தையும் அறிதலே கல்வி கற்றல் ஆகும்.  ஒரு பிள்ளை எப்போது கல்வி கற்க ஆரம்பிக்கின்றது?  அது தான் பிறந்த கணத்தில் இருந்தே கல்வி கற்க்க ஆரம்பிக்கின்றது.  சாதாரண பாடசாலைக் கல்வியில் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தையால் கற்றலுக்காக மொழியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முடியாத பருவத்தில் அது தனது ஐந்து புலன்களையுமே கற்றலுக்காக அதாவது சூழலை அறிவதற்க்காகப் பயன்படுத்துகின்றது.  உதாரணமாக ஒரு ஐந்து மாத வயதுடைய பிள்ளைக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுக்கும் போது, அது அதனைத் தொட்டு, முகர்ந்து, சுவைத்து, பார்த்து, அதிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அப்பொருளை ஆராச்சி செய்கின்றது.  குழந்தை வளர வளர அதனுடைய சூழலின் பரப்பும் அதிகரிக்கின்றது.  அது ஆராச்சி செய்யவேண்டிய பொருட்களின் அளவும் அதிகரிக்கின்றது.

சுதந்திரக் கல்வி
குழந்தைகள் சுதந்திரமான கல்வியையே விரும்புகின்றார்கள்.  பெற்றோர் தாம் விரும்பும் ஒரு பொருளை ஆராச்சி பண்ணும்படி தம் குழந்த்தையை வற்ப்புறுத்த முடியாது. குழந்தைகள் தாம் விரும்பும் நேரத்தில் தாம் விரும்பும் பொருட்களையே ஆராச்சி பண்ன்ண விரும்புகின்றன.

குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல்
குழந்த்தைகளின் கல்விச்சுதந்திரத்தில் பெற்றோர் தலையிடுவது வரவேற்க்கத்தக்கது இல்லையாயினும் அவர்களின் கல்வியை ஊக்குவிப்பது பெற்றோரின் தலையாய கடமையாகும்.  இதற்காக பெற்றோர் ஒரு முக்கிய உண்மையை அறிந்திருத்தல் வேண்டும். குழந்தை தான் நம்பிக்கை வைக்கின்ற ஒரு சூழலைத்தான் ஆராச்சி பண்ண முற்படும்.  ஒரு சூழலைப் பார்த்துக் குழந்தை பயப்படுமாயின் அது அச்சூழலைப் பற்றி அறியவோ அல்லது ஆராச்சி பண்ணவோ முற்படாது.  இதனால் குழந்தைக்கு ஒரு நம்பிக்கையான சூலலை ஏற்ப்படுத்துவது பெற்றோரின் கடமையாகின்றது.

கற்றலுக்கு உகந்த நம்பிக்கையான சூழல்
கற்றலுக்கு உகந்த ஒரு நம்பிக்கையான சூழலானது அன்பான பராமரிப்பு மூலமே குழந்தைக்கு வழங்கப்படலாம்.  உலகில் உள்ள அத்தனை பெற்றோரும் தம் பிள்ளைகளை அன்பு செய்யத்தான் செய்கின்றார்கள்.  ஆனாலும் தம் உள்ளத்து அன்பை ஆரோக்கியமான அன்புப் பராமரிப்பாகக் கொடுப்பது எல்லாப் பெர்றோருக்கும் சாத்தியம் இல்லை.

குழந்தை விளையாட்டினூடாகச் சூழலை ஆராச்சிபண்ணிக் கல்வி கற்க்கும்போதெல்லாம் பெற்றோருடைய அல்லது பொறுப்பான பெரியவர்களின் பிரசன்னத்தை வேண்டி நிற்க்கின்றது. விளையாட்டின் போது ஏற்ப்படும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஏற்ப்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும், தன்னுடைய வெற்றிகளின்போது பாராட்டவும், தோல்விகளிபோது அரவணைத்துக் கொள்ளவும் அது பெரியவர்களின் அருகாமையை வேண்டி நிற்க்கின்றது.

பெற்றோருக்கு ஒரு வார்த்தை
உங்கள் குழந்தைகளின் கல்வி கற்க்கும் திறனை ஊக்கப்படுத்தும் முகமாக அன்புப் பராமரிப்பைக் கொடுப்பதற்க்காக அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அன்புப் பராமரிப்பைக் குழந்த்தைக்குக் கொடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கல்வி கற்க்கும்.  அவர்களுக்கு ஆபத்துக்கள் அற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் கற்றலைத் தூண்டும் முக்கியமான விடயமாகும்.

Wednesday 3 July 2013

உணவு விருப்பைத் தூண்டக்கூடிய வகையில் அழகாக வெட்டி அடுக்கப்பட்ட கரட் துண்டுகள்.

இது என்னுடைய சொந்த்தக் கற்பனை அல்ல.  என் மகளின் பாடசாலையில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஒருங்குகூடல் விழா ஒன்றிற்காகச் சென்றிருந்தபோது கண்டது.  பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போய்விட்டது.  பிறகு என்ன, வீடு வந்ததும் அதே விதமாகவே செய்து பார்த்தேன்.  நல்ல பலன் கிடைத்தது.  இபோதெல்லாம் அடிக்கடி என் சாப்பாட்டு மேசையில் இந்தக் கரட் துண்டுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.  சத்துணவுக்கு சத்துணவும் ஆகிற்று மேசை அலங்காரத்துக்கு மேசை அலங்காரமும் ஆகிற்று.

எல்லா அம்மாக்களும் போலவே என்னுடைய பெரும் பொளுதும் சமையலறையில் தான் கழிகின்றது.  என் பிள்ளைகள் எனக்கு ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்றாலும், என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றாலும் சமையலறைக்குத்தான் வரவேண்டும்.  அப்படி சமையலறைக்கு வரும் போதெல்லாம் அவர்களை அறியாமல் இந்தக் கரட் துண்டுகள் அவர்கள் வாயில் நுழைவதை நான் அவதானித்திருக்கின்றேன்.  கூடவே அவர்களுடைய நண்பர்களும் இருந்தால் போதும்.  உள்ளே செல்லும் கரட் துண்டுகளின் அளவு அதிகரிக்கத்தான் செய்கின்றது.  முயற்ச்சித்துப் பாருங்களேன், நண்பர்களே!