Sunday 29 September 2013

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னரே தேநீர் அல்லது காலையுணவை உள்ளெடுக்கும் பழக்கம் எம்மவரிடையே பரவலாக உள்ளது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவின் அவசியம்

மருத்துவ சுகாதார உலகத்தால் இப்போதெல்லாம் காலை உணவின் அவசியம் உலகம் முழுவதிலுமே வலியுறுத்தப் படுகின்றது.  ஒருவர் அன்று நாள்முழுவதும் தொழிற்படுவதற்க்கு வேண்டிய சக்தியைக் காலை உணவு தருகின்றது.  காலை உணவைச் சரிவர எடுக்காத ஒருவரால் அன்றைய நாளுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்காமல் போகலாம்.  விசேடமாக சிறு பிள்ளைகளிற்கும் பள்ளிப் பிள்ளைகளிற்க்கும் காலை உணவு மிகவும் அவசியம்.

ஆனால் பாடசாலைப் பிள்ளைகளிடையே சரிவரக் காலை உணவு அருந்தாத பழக்கம் நிலவுகின்றது.  காலை நேர அவசரத்தில் பஸ்ஸை விட்டுவிடுவோமோ அல்லது பாடசாலைக்குப் பிந்தி விடுவோமோ என்கிற பதட்டத்தில் பிள்ளைகள் காலை உணவை அலட்சியம் செய்கின்றார்கள்.

ஆனாலும் பெற்றோர் காலை உணவின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்கள் காலை உணவு உண்ண வலியுறுத்த வேண்டும்.  காலை உணவானது சக்தி தரக்கூடிய பாண், பட்டர் அல்லது அதற்குச் சமமான உணவைக் கொண்டிருப்பதுடன் பால் பழம் போன்ற போசணை உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்களுக்கு மாலா காலை உணவு உண்கின்றாள்
                                                          maala is having breakfirst

Saturday 28 September 2013

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?

காலை வேளை என்றாலே எல்லா வீடுகளிலும் அவசரமும் tensionனும் தான்.  வேலைக்குப் போபவர்கள், பாடசாலை போபவர்கள், கலாசாலை போபவர்கள் எல்லோரும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற நேரம் அது. அந்த அவசரமான வேளைகளில் வீட்டிலுள்ள சிறுபிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பார்களே, அது உண்மையிலேயே அம்மாமாரைச் சிரமப் படுத்துகின்ற காரியம் தான்.

பிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் போதிய அளவு நித்திரை செய்யவில்லை என்பதேயாகும்.
பிள்ளைகளுக்கு போதிய அளவு நித்திரை கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் சில

1.  சிறு பிள்ளைகளை இரவு 8.00 மணிக்கே நித்திரைக்கு அனுப்ப வேண்டும்.
2.  அவர்களை தனியான கட்டிலிலோ அல்லது படுக்கையிலோ தனியாகப் படுக்கப் பழக்குதல் வேண்டும்.
3.  பிள்ளைகள் படுக்கும் இடம் கடினமானதாக இல்லாமல் சொகுசானதாக இருக்க வேண்டும்.
4. பிளைகளின் படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை எல்லாம் சுத்தமானதாக மனதுக்கு ரம்யம் தருவனவாக இருக்க வேண்டும்.
5. இரவு உணவு கனதியானதாக இல்லாமல் இலகுவானதாக இருக்க வேண்டும்
6. பிள்ளைகளை இயன்றவரை தனியான, கதக்தப்பான வெப்பநிலை உள்ள அறையிலே தூங்க விட வேண்டும்.
7. பிள்ளைகள் தூங்கும் நேரத்தில் அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. பிள்ளைகள் தூங்கும் அறை சத்தம் இல்லாதவேறு அமைதியாக இருக்க வேண்டும்.

இவ்வளவு ஏற்ப்பாடுகளையும் பிள்ளைகளுக்குச் செய்யும் போது பிள்ளைகள் நிச்சயம் தமக்குத் தேவையான அளவு நித்திரையையும் ஓய்வையும் எடுப்பார்கள்.  காலை வேளைகளில் எழும்பமாட்டேன் என்று அடம் பிடிக்கமாட்டார்கள்.

மேலதிக வாசிப்புக்கு
மேலதிக வாசிப்புக்கு