Wednesday 16 August 2017

சமைத்த உணவும் சமைக்காத உணவும்



அடுப்பில் வைத்து சமைத்த உணவை விட சமைக்காத உணவுகளில் சத்து அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.  படித்தவுடன்  விளங்கிவிட்டது.  விளங்கியவுடன் பிடித்துவிட்டது.  அதன்பின்பு எப்போதும் நான் அதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  தாயகத்தில் கிராமத்தில் வாழ்ந்தவரை சமைக்காத இயற்கை உணவுகள் நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை.  அந்தக் காலங்களில் அவற்றின் மதிப்புப் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை.  நகர வாழ்க்கைதான் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

சமைக்காத உணவுகளின் பெறுமதி பற்றிய பூரண புரிந்துணர்வு வந்தபின் இப்போதெல்லாம் என் நாளாந்த வாழ்க்கையில் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்து, துண்டு துண்டாக நறுக்கி சாப்பிட்டு மேசையில் அழகாக வைத்துவிடுகிறேன்.  அழகாக பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற இயற்கை உணவுகளை பார்த்த மாத்திரத்திலேயே பிள்ளைகளிற்கு உணவு விருப்பு ஏற்பட்டுவிடுகிறது.  மேசையடியில் இருந்து நல்ல தாராளமாக எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறார்கள்.  fast food இற்கு வயிற்றில் இடமில்லாமல் போகிறது.  பிள்ளைகள் என்னதான் fast food விரும்பிகளாக இருந்தாலும் வளர்ந்த பிள்ளைகளிற்கு அவைபற்றிய விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது.  தவறு என்று தெரிந்தும் அவற்றை உண்ணும் போது அவர்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது.  நான் என்  சாப்பாட்டு மேசையை சமைக்கப்படாத இயற்கை உணவுகளால் நிரப்பும் போது என் 14 வயது மகன் சமையலறையில் வைத்து என்னைக் கட்டி அனைத்து முத்தமிடுகிறார்.  ஆக என் சாப்பிட்டு மேசை எனக்கும் என் பிள்ளைகளிற்கு நல்ல அன்புறவையும் புரிதலையும் ஏற்படுத்தி தருகிறது.

2 comments:

  1. சமைக்குற நேரம், பாத்திரம் கழுவும் வேலை மிச்சம்

    ReplyDelete
  2. இதுவே கிராமமாக இருந்தால் இது கூட தேவை இல்லை சகோதரி. பாதி உணவை மரத்தின் கீழேயே முடித்து விடலாம்.

    ReplyDelete